வெள்ளி, 29 ஜூலை, 2016

கலாம் நினைவு நாள் 2016.


         இன்று 27.07.2016 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் அப்துல் கலாம் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
              பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் அ.பெ.ஜை.அப்துல் கலாம் நினைவு நாள் பற்றி எடுத்துக் கூறி அவரின் புதுமை மற்றும் புரட்சிகரமான விழிப்புணர்வுக் கருத்துக்கள் பற்றியும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர் கூறிச் சென்றுள்ள கருத்துக்கள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி நாம் அவற்றை முழுமையாக பின்பற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கினார்.
               அடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலங்கரித்து வைக்கப்பட்ட அப்துல் கலாம் நிழற்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
            நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருமதி ந. திலகா, த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்..


























திங்கள், 25 ஜூலை, 2016

டெங்கு விழிப்புணர்வு முகாம்



இன்று 21.07.2016l ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி உடல் நலச் சங்கம்  சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று நாடு முழுவதும் பரவலாக பாதிப்புக்கு உள்ளாக்கும் டெங்கு காய்ச்சல் பற்றியும், அதை தடுப்பதற்கான பல்வேறு விழிப்புணர்வுக் கருத்துக்கள், நாம் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக்கூறினார்.
அடுத்து சிறப்பு அழப்பாளராகக் கலந்துக்கொண்ட காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் திரு மு. துரைராஜ் அவர்கள் டெங்கு காய்சல் பரவும் முறைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் அதை தடுப்பதற்கான வழிகள் ஆகிவற்றையும், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பொதுவான சுகாதார விழிப்புணர்வுக் கருத்துக்களையும் தனது சிரப்புரையில் வெளிப்படுத்தினர்.
விழாவில் பங்கேற்ற ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு சி. சிவபிரகாசம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்
பின்னர் மாணவர்கள் தமது சந்தேகங்களையும், சுகாதாரம் தொடர்பான கருத்துக்களையும் கலந்துரையாடல் மூலம் வெளிப்படுத்தினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, அ. நர்மதா, திரு வே. வஜ்ஜிரவேல்  ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.  













பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி - 2016



பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள்
இன்று 22.07.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி விளையாட்டு மன்றம் சார்பில் மாணவர்களுக்கான  சதுரங்கப் போட்டிகள்  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று பள்ளியில் நடத்தப்படும் சதுரங்கப் போட்டிகள் பற்றி எடுத்துக் கூறி மாணவர்கள் சதுரங்கம் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், இதனால் மாணவர்களின் சிந்தனைத்திறன், மனதை ஒருமுகப்படுத்தும் திறன் ஆகியவை வளரும் என்பது பற்றியும் கூறி அனைவரும் அவசியம் இவ்விளையாட்டில் ஈடுபட வேண்டும் எனவும் எடுத்துக்கூறினார்.
அடுத்து 4,5 வகுப்பு மாணவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனி அணிகளாகவும், 6,7,8 வகுப்பு மாணவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனி அணிகளாகவும், போட்டியில் ஈடுபட்டனர். மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற போட்டியில் இறுதியில் இரண்டு ஆண்கள் அணியும், இரண்டு பெண்கள் அணியும் தேர்வு செய்யப்பட்டது. அதில் 4,5 வகுப்பு ஆண்கள் பிரிவில் வே. நிஷாந்த், வே. தினேஷ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் பெ. கலையரசி, செ. பூமிகா ஆகியோரும், 6,7,8 வகுப்பு ஆண்கள் பிரிவில் மா. தமிழரசன் பூ. தினேஷ், ஆகியோரும், பெண்கள் பிரிவில் சு. அர்ச்சனா, சி. விஷ்ணுபிரியா ஆகியோரும் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்.
பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, அ. நர்மதா, ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல்  அனைவருக்கும் நன்றி கூறினார்.