செவ்வாய், 2 ஜனவரி, 2018

விலையில்லா பாடநூல்கள் வழங்கும் விழா


இன்று 02.01.2018ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  மூன்றாம் பருவ விலையில்லா பாடநூல்கள் வழங்கும் விழா  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் அரசால் வழங்கப்படும் விலையில்லா கல்விப் பொருட்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, அனைத்து மாணவர்களும் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என எடுத்துக் கூறினார். .
பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், இரண்டு இணை சீருடைகள்  பள்ளித் தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள், ந. திலகா, த.லதா, வே. வஜ்ஜிரவேல்  ஆகியோர் செய்திருந்தனர்













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக