சனி, 25 மார்ச், 2017

எனக்கு (தலைமை ஆசிரியர்) பிறந்த நாள் விழா, எமது பள்ளியில்........


           இன்றைய 15.03.2017 எனது பிறந்த நாளுக்கு வழக்கம்போல எனது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிட ஆசிரியர்களுக்கு வழங்கிட பரிசுப் பொருட்கள் மற்றும் இனிப்பு ஆகியவற்றுடன் சென்றேன்.......
          அனைவருக்கும் எதிர்பாரா இன்ப அதிர்ச்சித் தகவலாக இருக்க வேண்டும் எனக் கருதி காலை இறவணக்கக் கூட்டத்தில் கூட எவ்வித முன் தகவலும் தெரிவிக்காமல் இறைவணக்கக் கூட்டத்தை முடித்துவிட்டு அலுவலக அறைக்குச் சென்றுவிட்டேன்......
       அடுத்த சில நிமிடங்களில் எனக்கே அதிர்ச்சி அளித்தார்கள் எனது மாணவர்கள், ஆம் எனக்கான பிறந்த நாள் பரிசுகளோடும், எனக்கு வாழ்த்து கூறவும் எனது அறையில் குழுமிவிட்டார்கள் 1 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து குழந்தைகளும்.....
               எனது பள்ளி உதவி ஆசிரியர்களோ அவர்களும் தமது பங்காக பிறந்த நாள் கேக் சிறப்பு செய்வதற்கான சால்வை, பரிசுப் புத்தகம் என கொண்டு வந்து நான் அவர்களுக்கு வழங்குவதற்கு முன்பு முந்திக்கொண்டார்கள்......
அந்த நேரம் எனது மனதில் உதித்தது என் மீது சுமத்தப்படும் கடன் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது, அதை அனைவரிடமும் நேரிலேயே கூறியும்விட்டேன். ஆனால் அவர்களின் பதில் என்னை சிந்திக்கத் தூண்டிவிட்டது.....
                ஆம், அதில்தான் அடங்கியுள்ளது தலைமை ஆசிரியர் - உதவி ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையிலான மேம்பட்ட ஆரோக்கியமான உறவு.......
             இந்த உறவு இன்றும், என்றும் தொடர எல்லாம் வல்ல இறையருள் துணை நிற்கட்டும்........
                              எனக்கு இன்று நேரிலும், அலைபேசி வழியாகவு, முகநூல், கட்செவி அஞ்சல் மூலமாகவும் காலையில் இருந்து இரவு வரையில் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிய எனது அன்பு நட்புகள், உறவினர்கள், மனைவி, மகன், மகள், மருமகன், பேத்தி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி...நன்றி.... நன்றி......




























1 கருத்து:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று போல என்றும் மகிழ்வோடு வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு