வியாழன், 26 ஜனவரி, 2017

தேசியத் திறனாய்வுத் தேர்வு சிறப்புப் பயிற்சி முகாம் நிறைவு விழா




ஊத்தங்கரை ஊராட்சி துவக்கப் பள்ளியில் இன்று 25.01.2017 ல் தேசியத் தினாய்வுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.
ஊத்தங்கரை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த. மகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், ஜோதிநகர் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் தமது உரையில் பயிற்சி முகாமின் நோக்கம் மற்றும் பயிற்சி முகாமில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் மிகச்சிறப்பாக செயல்பட்டனர் எனக் கூறியதோடு, இப்பயிற்சி முகாமில் 12 மனத் திறனறித் தேர்வையும் 11 பாடத் திறனறித் தேர்வையும் எழுதி உள்ளதை சுட்டிக்காட்டி, மிகச் சிறப்பாக நடைபெற்ற பயிற்சி தற்போது நடைபெற உள்ள தேர்வுக்கு மட்டுமல்லாது பிற்கால போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும் எனக் கூறி இப்பயிற்சி முகாமுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியவர்களை நினைவு கூர்ந்து அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி விழாவிற்கு வருகை புரிந்துள்ள அனைவரையும் வரவேற்றார்..
 விழாவில் ஊ.ரெட்டிப்பட்டி தலைமை ஆசிரியர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி, ஒட்டம்பட்டி தலைமை ஆசிரியர் திரு கி. ஞானசேகரன், பாம்பாறுஅணை தலைமை ஆசிரியர் திரு மு. மோகன்குமார், கெண்டிகானூர் தலைமை ஆசிரியர் திரு சி.என். பழனி, அப்பிநாயகன்பட்டி தலைமை ஆசிரியர் திருமதி செல்வமணி ஆகியோர்,  வாழ்த்துரை வழங்கினர்.
பயிற்சி அளித்த ஆசிரியர்களான திரு இரா. சசிக்குமார், திரு விஜயன், திரு கலைச்செல்வன், திரு அருண்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்
, தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு வே. சந்திரசேகரன் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி மாணவர்களுக்கா அறிவுரைகளைக் கூறி  சிறப்புரை ஆற்றினார்.
இன்றைய பயிற்சி முகாமில் ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சார்ந்த 18 பள்ளிகளில் இருந்து 160 மாணவர்கள் மற்றும் அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் ஆசிரியர் திரு ஸ்ரீதர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக