புதன், 13 டிசம்பர், 2017

பாரதியார் பிறந்தநாள் விழா....


இன்று 11.12.2017 திங்கட்கிழமை ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள்  விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பாரதியாரின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்று இன்றைய விழாவின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று அகில இந்தியா முழுமையும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் பாரதியாரின் தன்னலமற்ற பங்களிப்புதான் என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு, அவரின் தேசபக்தி, மக்களை விழிப்புணர்வூட்டும் பாடல்கள், பெண்கல்வி, பெண்ணுரிமை தொடர்பான கருத்துக்கள் ஆகியவை பற்றியும் விரிவாக விளக்கி, அனைவரும் பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்திட முன்வர  வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இன்று சர்வதேச மலைகள் தினம் என்பதையும், சர்வதேச குழந்தைகள் நல நிதியம் துவக்கப்பட்ட நாள் என்பதையும் கூறி இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி அவர்களின் பிறந்த நாள் என்பதையும் நினைவு கூர்ந்து குறிப்பிட்ட அந்த நாட்களின் சிறப்பு பற்றியும் எடுத்துக் கூறினார்.
பின்னர் மாணவர்கள் பாரதியார் பிறந்தநாள் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் வட்டார, மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள், திருமதி த. இலதா, திருமதி ந. திலகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

















செவ்வாய், 14 நவம்பர், 2017

குழந்தைகள் தினவிழா


இன்று 14.11.2017ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் குழந்தைகள் தினவிழா  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் முன்னாள் இந்திய பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினவிழாவாக கொண்டாதுவது பற்றி எடுத்துக் கூறி அவரின் வாழ்க்கை, நாட்டு சுதந்திரத்திற்கு அவர் செய்த சேவைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் ஏற்படுத்திய பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் பற்றியும் விளக்கினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள்  குழந்தைகள் தினவிழா தொடர்பாக  எனக்குப் பிடித்த நேரு மாமா என்ற தலைப்பில் தமது கருத்துக்களை பேச்சு, கவிதை மூலம் வெளிப்படுத்தினர்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் பள்ளி அளவிலும், குறுவள மைய அளவிலும், ஒன்றிய , மாவட்ட அளவிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் பள்ளித் தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியில் மரம் வளர்ப்பு, தோட்டம் பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும்  10 மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.
பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் பாரம்பர்ய மற்றும் இயற்கை சத்துக்கள் அதிகம் நிரம்பிய கடலைகொட்டை, வெல்லம் கலந்த இனிப்பும், எழுது பொருட்களும் வழங்கப்பட்டது
விழாவில் உதவி ஆசிரியர் திருமதி திலகா வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.