திங்கள், 6 ஜூன், 2016

உலக சுற்றுச் சூழல் தினவிழா 2016



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (21.03.2016) ”உலக சுற்றுச் சூழல் தினவிழா” கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளருமான திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் உலக சுற்றுச் சூழல் நாள் தொடர்பாக கருத்துக்களையும் அவை கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு  எவ்வகையில் மனித குலத்திற்கு பயன் தருகிறது என்பது குறித்தும் தெளிவாக விளக்கினார்.
விழாவில் உலக சுற்றுச்சூழல் நாள் தொடர்பான கவிதை, பேச்சுப் போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள்  வழங்கப்பட்டது.
பின்னர் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் நாள் நினைவாக மரக் கன்றுகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் நடப்பட்டது.
பள்ளி உதவி ஆசிரியர் ந. திலகா வாழ்த்துரை வழங்கினர்.
இறிதியில் உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக