செவ்வாய், 19 ஏப்ரல், 2016

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பயணம்...


            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 18.04.2016 ல் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது.
            இப் பயணத்தில்  ஜோதிநகர், நாச்சக்கவுண்டனூர்,காமராஜ் நகர், கெங்கி நாயகன்பட்டி ஆகிய கிராமங்களிலும், மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படும் ஏரிப் பகுதியிலும் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரைச் சந்தித்து அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும், அரசு பள்ளியில் சேர்க்க வேண்டியும், ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் பள்ளியில் உள்ள சிறப்பு கற்றல்/கற்பித்தல் வசதிகள் பற்றியும் விரிவாக விளக்கிக் கூறப்பட்டது. இப்பயணத்தில்  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி, ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுனர் திரு சிவபிரகாசம் ஆகியோரும் மாணவர்கள் சிலரும் கலந்துக் கொண்டனர். 





























3 கருத்துகள்: