வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஊத்தங்கரை கணினி நூலகம் - எமது பள்ளி மாணவர்களின் பார்வை........

                 எமது பள்ளி மாணவர்கள் 40 பேர் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் அமைந்துள்ள கணினி நூலகத்தை பார்வையிட்டனர்.
              ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கணினி நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்நூலகம் முழுமையும் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் நிதி உதவியின்  மூலம் கட்டப்பட்டது. தமிழகத்திலேயே எந்த அரசு பள்ளியிலும் இல்லாத அளவிற்கு நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கணினி நூலகம் இது. இங்கு அனைத்து போட்டித் தேர்வுக்கும் தேவையான விலை உயர்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.
                  மேலும் இணைய இணைப்புடன் கூடிய 30 கணினிகள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக உள்ளன. இந்த நூலகத்தை எமது மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்தனர். 
                  பின்னர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமி அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக