திங்கள், 8 ஜூன், 2015

உலக சுற்றுச்சூழல் நாள் விழா ........



இன்று 05.06.2015 வெள்ளிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக சுற்றுச்சூழல் நாள் விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் புங்கன் மரக்கன்றுகள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் நடப்பட்டது.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று அகில இந்தியா முழுமையும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உலக சுற்றுச்சூழல் நாள் விழா கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் இன்றைய சுற்றுச்சூழலைக் காப்பது நமது அனைவரின் கடமை என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெறுவதோடு அதற்கான சரியான செயல் திட்டங்களை செயல்படுத்திட முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் உலகச் சுற்றுச்சூழல் நாள் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, செல்வி . இலதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

























திங்கள், 1 ஜூன், 2015

2015 – 16 கல்வி ஆண்டுக்கான முதல் பருவ பாடநூல்கள் வழங்கும் விழா



         ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 01.06.2015 பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாட நூல்கள் மற்றும் இவ்வாண்டுக்கான முதல் கட்ட சீருடைகள் வழங்கங்கப்பட்டது.
     பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் சீருடைகளை ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இர. பிரசாத் அவர்கள் வழங்கினார்.
      கடந்த ஆண்டுக்கான விடுமுறை முடிந்து மீள இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதல் நாளிலேயே அனைத்து பாடநூல்களும் வழங்கப்பட்டமை மாணவர்கள் மனதில் மகிழ்வை உண்டாக்கியது.
     விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, செல்வி .இலதா, திரு வே வஜ்ஜிரவேல், திருமதி . நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.