திங்கள், 11 நவம்பர், 2013

கல்வி உரிமை நாள் விழா





ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 11.11.2013 ல் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் விழா கல்வி உரிமை நாள் விழாவாக நடைபெற்றது.
இன்று இப்பள்ளியின் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி சு சாரதா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை உரையாற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், தொடர்ந்து 11 ஆண்டுகள் கல்வி அமைச்சராக இருந்து இந்திய கல்வி முறையில் பெரும் மாற்றம் ஏற்பட வழி வகுத்தவரான மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறி அவரின் பிறந்த நாளை கல்வி உரிமை நாளாக கொண்டாட வேண்டி மத்திய , மாநில அரசுகள் அறிவித்திருப்பதையும்  அந்நாளை நாம் கொண்டாட வேண்டியதன் அவசியம் பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் கல்வியின் சிறப்பையும், அவசியத்தையும் வலியுறுத்தும் பாடல்களையும், கவிதைகளையும் பாடினர்.
     இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு . சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்தனர்.








\

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக