ஞாயிறு, 27 ஜனவரி, 2013

64வது இந்திய குடியரசு தின சிறப்பு விளையாட்டுப் போட்டிகள்


                    ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 64வது குடியரசு தின சிறப்பு விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 
                    முன்னதாக காலையில் பள்ளியில் மூவர்ண தேசியக்கொடி பள்ளித் தலைமை ஆசிரியரால் ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் விழா துவங்கியது. பின்னர் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளி மாணவர்கள் குடியரசுதினம் தொடர்பான பாடல்கள், கவிதைகள் ஆகியவற்றைப் பாடினர் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா.நாகராஜு மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.