ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மனவளக் கலை யோகா பயிற்சிகள்

 
 
இன்றைய உலகம் அவசர உலகம் மட்டுமல்ல, ஆபத்தான உலகமும் கூட. ஆம், மனிதனை சோம்பேரி ஆக்கி, இளம் வயதிலேயே அனைத்து நோய்களையும்  வரவழைக்கும் வகையில் மனிதர்களை மாற்றிவிட்டது. அதற்கேற்ப தரமான உணவுப் பொருட்கள் தற்போது இல்லை. அன்றாடப் பணிகள் குறைந்துவிட்டது.

எனவே இளம் வயது குழந்தைகள் தம்மைக் காத்துக்கொள்ள அவற்களுக்கு உடற்பயிற்சியும், யோகாவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு எமது பள்ளியில் மன வளக் கலை யோகா பயிற்சி வகுப்புகள். நடத்தப்பட்டது. பயிற்சியை மனவளக்கலை துணை பேராசிரியர் திருமதி அனுசுயா அவர்கள் மூன்று நாட்கள் நடத்தினார். மாணவர்கள் மிக்க ஆர்வத்தோடு இப் பயிற்சியில் பங்கு பெற்றனர். பயிற்சி வகுப்புகளில் எளிய உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் எளிய யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாணவர்கள்  தினமும் தமது வீட்டில் இப்பயிற்சியை மேற்கொள்வதாக உறுதி மேற்கொண்டனர்.























1 கருத்து:

  1. பாடத்திட்டத்துடன் பகுத்தறிவையும் பண்பாட்டையும் நம் பண்டைப் பெருமையையும் கற்பிப்பவரே சிறந்த நல்லாசிரியர். தங்களது பள்ளி மாணவருக்கு யோகாசனம் கற்றுக் கொடுப்பதால் அவர்கள் ஆயுள் முழுமைக்கும் நோயின்றி நல்லவர்களாக வல்லவர்களாக வாழ்வர்.

    தங்களுக்கும், தங்களுடன் பணியாற்றும் அனைத்து ஆசிரியருக்கும், தங்களது மாணவர் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    அன்பன்
    கி.காளைராசன்

    பதிலளிநீக்கு